Saturday, January 15, 2011
at
6:41 AM
|
0
comments
Posted by
Ugentheepan
Ugentheepanமீண்டும் புதிய மாற்றத்துடன் உன்னை போல் ஒருவன்... |
|||||
Tuesday, January 11, 2011
at
9:24 PM
|
0
comments
தற்போது கிடைத்த தகவல் : கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு இயற்கையின் சீற்றத்துக்குள்ளாகியுள்ள கிழக்கு மாகாணத்தில் விடாது தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழையினாலும் உடைப்பெடுத்துப்பாயும் ஆறுகளினால் மக்களின் வாழ்விடங்கல் நீரினால் நிரம்பி போனதால் இதுவரையில் 10 இலட்சம் வரையிலான மக்கள் நிர்க்கதி நிலையடைந்து அரச பாடசாலைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தனியார் கட்டிடங்களில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 82 ஆயிரத்து 890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின் படி பல இடங்களில் பல ஆறுகள் உடைப்பெடுத்தும், நிரம்பி வழிவதாலும் பல பிரதேசங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தெரியவருகின்றன, மதியத்திலிருந்து இவ் செய்தி வெளியிடப்படும் வரை பல இடங்களை நீர் மட்டம் இரண்டு அடிவரை உயர்ந்திருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாகவும் இதற்க்கு உதவியாக சமூக சேவை அமைப்புக்களும், சமூக சேவை ஆர்வாளர்களும் உதவிவருவதாக தெரியவருகின்றது. புதிதாக பெருமளவான மக்கள் நலன்புரி முகாம்கலுக்கு இடம்பெர்ந்து வருவதால் இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு அவசரமாக வழங்க வேண்டிய தேவையிருக்கின்றது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதியளவு சமைத்த உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படாமையினால் மக்கள் பெரும் அவலத்தினை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சரியாக அடையாளம் கண்டு முழுமையாக அந்த உதவிகள் அவர்களை சென்றடைய வேண்டும், இந்த வேலையில் கிராம சேவையர்கள் சரியாகவும், நேர்மையாகவும் நடர்ந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது.உதவி வழங்கும் அமைப்புக்கள் உதவிகள் சரியாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். இன, மத,அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றாக கைகோர்த்து அவலப்படும் கிழக்கு மாகாண மக்களுக்கு கைகொடுக்க வேண்டும். பொது அமைப்புகள், சமய நிறுவனங்கள், தொண்டர் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நிவாரண உதவிகளை இம்மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும். பொதுமக்களும் தம்மால் இயன்ற உதவிகளை அரசினூடாகவோ அல்லது பொது அமைப்புகளினூடாகவோ வழங்க வேண்டும். தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்கு உடன் வழங்க தயாராக இருக்கின்றோம் அதுமட்டுமல்ல இவை தொடர்பான உங்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.
Posted by
Ugentheepan
Monday, January 10, 2011
at
6:06 AM
|
0
comments
கிழக்கு மாகாணத்திலும் சீரற்ற கால நிலை : மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு _ இதேநேரம் மட்டு. மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றபடியினால் மாவட்டத்தில் உள்ள அனைத்துவைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது, இந்த வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை ஊழியர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தற்போதைய வெள்ள நிலவரங்களின் புகைப்படங்களை நீங்கள் பார்க்கலாம். மட்டக்களப்பு பிரதான வீதி மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மட்டக்களப்பு பஸ் நிலையம் மட்டக்களப்பு பொது நூலகம்
Posted by
Ugentheepan
at
6:04 AM
|
0
comments
வாழ்வை தேடி போகிறாள். கருத்த கையில் கதறிய குழந்தையும் கசங்கிய கந்தை துணியும் ஏதோ கடந்த நினைவுகளை கொஞ்சம் கசிய வைகின்றது வசந்த வானில் வண்டுகளால் வந்த வானூர்தி துளைத்த குண்டு துவல்களால் குறிகிய வீட்டுக்குள் விடியலை தேடியவளுக்கு வெடி குண்டை விட வெள்ளை நுரையாய் சுக்ககியது - அந்த சுனாமி பாவம் அவளோ அபலை உச்சி வெயிலில் ஊரை விட்டு - ஏதோ துளைத்தது போல் துயரத்தில் மீண்டும் அவளின் வாழ்வை தேடி போகிறாள். . - உகந்தீபன் -
Posted by
Ugentheepan
at
6:03 AM
|
0
comments
விக்கிலீக்ஸ் விவகாரம் உலகின் போக்கை மாற்றுமா? விக்கிலிக்ஸ் விவகாரம் உண்மையாக இருக்குமாயின், விக்கிலீக்ஸ் தாபனத்தால் அரை நிர்வானமாகியுள்ள உலக விவகாரம் உலகின் போக்கை மாற்றியமையாக் கூடிய தரவுகளை கொண்டிருக்கின்றது. வல்லரசுகள் வல்லரசாக முயன்று கொண்டிருக்கும் நாடுகள், வளர் முக நாடுகள்,பின்தங்கிய நாடுகள், என்ற வகைப்படுத்தலுக்கு அடங்கியுள்ள நாடுகள் ஏதோ ஒரு வகையில் தத்தமக்கு உரிய பங்கினை வகிப்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அவ்வாறாயின் இன் நாடுகள் தங்கள் வகிபாகதினால் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளையும் விளையுகளையும் கருத்தில் கொண்டு ஒரு புதிய போக்கினை கடைபிடிக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளன. நாடுகள் ஒவ்வொன்றும் தத்தமது ஆதிபத்திய அபிலாசைகளையடைந்து கொல்வதற்க்கு பலவித தந்துரபாயங்களை செயப்படுத்துவதனால் ஏனைய நாடுகளின் வளர்சியை தடை படுத்துவதக்காக தனது மறை கரத்தை நீட்டியுல்லத்தை வரலாற்று பதிவுகளிலிருந்து பெற்றுக்கொள்ள கூடியதாக விருக்கிறது, பல நாடுகளில் மொழி, மத, இன மோதல்களை உருவாக்கலும் அதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து சரணாகதியடைய செய்தலும் போன்ற நடவடிக்கைகளால் உள்நாட்டு யுத்தங்கள் வறுமை போன்றனவற்றால் துயருறுவதை அரசியல், பொருளாதார, சமூக அறிஞர்களால் சுட்டி காட்டப்பட்டுல்லத்தை இங்கு அவதானிக்க வேண்டியுள்ளதுடன் அவ்வாறன நிகழ்வுகளை நாங்கள் நிகழ்கால பதிவுகள் மூலம் அறிந்துகொண்டுள்ளோம். எனவே இவ்வாரான விளைவுகளை ஏற்படுத்த கூடிய செய்தி பரிமாற்ற தகவல்கள் வெளிகொண்டுவரப்பட்டுள்ளமையானது நாடுகளின் தந்துரோபாயங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை ஏற்படுத்தப்போகின்றன. இன் நிகழ்வுகள் உலகின் போக்கை எதிபார விதமாக மாற்றியமைக்க கூடிய ஒரு தோற்றப்பாற்றை ஏற்படுத்தியுள்ளது.
Posted by
Ugentheepan
|
Live Cricket ScoresPeopleSrlanka
!-end>!-local>
Blog ArchiveFollowersAbout MeUgentheepan
ugentheepan
http://www.youtube.com/watch?v=YPDzPaWRk4s&feature=player_embeddedOnline RadioMARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger templates
|